Monday, January 5, 2015

தலாக்… தலாக்… தலாக்… மூன்றே வார்த்தையில் மூன்றாவது விவாகரத்து கொடுப்பாரா யுவன்ஷங்கர் ராஜா?

No comments :
முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு, திடீரென இஸ்லாமிய மதத்தை தழுவினார் யுவன் ஷங்கர் ராஜா. “மதம் மாறியது மன அமைதிக்காக மட்டுமே. அது இஸ்லாம் மதத்தில் நிறையவே உள்ளது. இனிமேல் என் வாழ்கையில் திருமணம் கிடையாது. அதைப்பற்றி நான் யோசிக்கப்போவது இல்லை எனவும் கூறினார். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே கீழக்கரையை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு இளையராஜா குடும்பம் செல்லவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் யுவன் திருமணம் பற்றி தான் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இஸ்லாமிய மதத்தில் தான் தலாக்… தலாக்… தலாக்… என மூன்று முறை சொன்னால் போதும் விவாகரத்து கொடுத்து விடுவார்கள். மேலும் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அதற்காகதான் யுவன் இஸ்லாம் மதம் மாறி இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் அப்பெண்ணை ‘தலாக்’ என மூன்று முறை கூறி விவாகரத்து செய்துவிட்டு நான்காவது திருமணத்திற்கு தயாராவார். என யுவன் ஷங்கர் ராஜாவிற்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலாவுகின்றன.

No comments :

Post a Comment