Thursday, January 22, 2015
வட இந்தியா மேடையில் தமிழில் பேசி கலக்கிய தனுஷ்!
தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் வரை சென்று விட்டார். இந்நிலையில் இவர் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் தனுஷை பாட சொல்லி இயக்குனர் கேட்டார், முதலில் அவர் தயங்கினாலும், ’தென்பாண்டி சீமையிலே, நான் பாடும் செவ்வந்தி பூ இது’ போன்ற பாடலை பாடி அசத்தினார்.என்னை விட நன்றாக பாடுகிறாய் என இளையராஜா கூற, ’சார் நானே பதட்டத்துல இருக்கேன், நீங்க வேற ஏன் சார்’ என தனுஷ் தமிழ் மொழியிலேயே பேசினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment