Monday, February 9, 2015

லட்சுமிமேனன் சினிமாவை விட்டு சென்றதற்கு காரணம் பாலியல் தொல்லையா?

No comments :
ரகுவின்டே சொந்தம் ரஸியா, ஐடியல் கப்பில் என இரண்டு மலையாளப்படங்களில் நடித்த நிலையில், சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன்.
தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்தார். 18 வயதான லட்சுமிமேனன் தற்போது கொம்பன், சிப்பாய் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நான் சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் லட்சுமிமேனன்.
நிறைய படங்களில் கிராமத்து பெண்ணாகவும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் மாதிரியுமான கேரக்டர்களிலும் நடித்து எனக்கு போரடித்துவிட்டது. தொடர்ந்து எல்லாப்படங்களிலும் அதே போன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு வாய்ப்புகளும் வருகின்றன. இது எனக்கு பிடிக்கவில்லை. ஒரே மாதிரி வேடங்களில் நடித்து போரடித்து விட்டது. எனவே தான் சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இனிமேல் படிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன்.
தற்போது பிளஸ்-2 படிக்கிறேன். தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும், என்பதே இப்போதைய நோக்கம். ப்ளஸ் டூவுக்குப் பிறகு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்க முடிவு செய்துள்ளேன். அதன்பிறகு ஃபேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்றும் நினைத்திருக்கிறேன். மறுபடி சினிமாவுக்கு வந்தாலும் நடிகையாக இல்லாமல் ஃபேஷன் டிசைனராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று லட்சுமிமேனன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அத்தனை எளிதில் யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும், நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைந்து முன்னணி நடிகையாகும் அதிர்ஷ்டம் அமையாது. லட்சுமிமேனனுக்கு இதெல்லாம் 15 வயதிலேயே சாத்தியப்பட்டது.
அதுமட்டுமல்ல, படங்களில் நடிக்க பல லட்சங்கள் சம்பளம் வாங்கியதால் தற்போது கோடீஸ்வரியாக இருக்கிறார். இப்படி பணத்தையும், புகழையும் கொடுத்த சினிமாவை லட்சுமி மேனன் உதறுவதற்கு என்ன காரணம்?
படிப்புக்காக என்பதையும், பாவாடை தாவணி போராடித்துவிட்டது என்று அவர் சொல்வதையும் நம்ப முடியவில்லை. ஒருவேளை அவருடன் நடித்த ஹீரோக்கள் கொடுத்த செக்ஸ் தொல்லை காரணமாக மனம் வெறுத்து சினிமாவுக்கு குட்பை சொல்கிறரா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
லட்சுமி மேனன் உடன் இணைந்து நடித்த ஹீரோக்கள் விக்ரம் பிரபு (கும்கி), சசிகுமார் (சுந்தர பாண்டியன், குட்டிப்புலி,), விஷால் (பாண்டிநாடு, நான் சிவப்பு மனிதன்), சித்தார்த் (ஜிகர்தண்டா), விமல் (மஞ்சப்பை), கௌதம் கார்த்திக் (சிப்பாய்), கார்த்தி (கொம்பன்) ஆகிய ஏழு ஹீரோக்கள் தான்.
இவர்களில் யாரோ ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதால் இப்படி ஒரு முடிவை லட்சுமி மேனன் எடுத்தாரா? அல்லது அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், கல்வித் தந்தைகளின் அழைப்புக்கு அஞ்சி நடிப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரா? என துப்பறியும் வேலையை தொடங்கி இருகிறது கோடம்பாக்கம்.

No comments :

Post a Comment